Tag Archives: காரை

கவுதமேஸ்வர் திருக்கோயில், காரை

அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில், காரை, வேலூர் மாவட்டம்.

+91- 97901 43219, 99409 48918.

காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி சிவனைத் தரிசிக்கலாம்.

மூலவர் கவுதமேஸ்வரர்
அம்மன் கிருபாம்பிகை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் காரைமரைக்காடு
ஊர் காரை
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

தன் மனைவி மீது ஆசை கொண்ட இந்திரனை கவுதம முனிவர் சபித்து விட்டார். இச்சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. மன அமைதிக்காக இலிங்க வழிபாடு செய்தார். அபிஷேகம் செய்வதற்காக கங்கையை இவ்விடத்தில் பொங்கச்செய்தார். கவுதமரின் வேண்டுதலுக்காக வந்த இந்நதி, “கவுதமிஎனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், பாலாற்றில் இந்த நதி ஐக்கியமாகி விட்டது. கவுதமர் பூஜித்த சிவன் இங்கு கவுதமேஸ்வரர்என்ற பெயரில் அருளுகிறார்.

அம்பாள்கிருபாம்பிகை சிவன் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் காட்சி தருகிறாள். ஒரே சமயத்தில் சிவன், அம்பிகை இருவரையும் தரிசிக்கும் வகையில் கோயிலின் அமைப்பு இருக்கிறது. கோயில் முகப்பில் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் உள்ளார்.