Tag Archives: சிங்கவரம்

அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம்

அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோயில், சிங்கவரம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 94432 85923 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அரங்கநாதர்

உற்சவர்

அரங்கநாதர்

தாயார்

அரங்க நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கவரம்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

இரணியகசிபு என்ற அசுர மன்னன் தன்னையே வணங்கவேண்டும் என்றும், பெருமாளை வணங்கக்கூடாது என்றும் நாட்டு மக்களுக்கு உத்தர விட்டான். இதை அனைவரும் பின்பற்றினர். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்த அவனது மகன் பிரகலாதன் இதற்கு மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பார்க்காமல் அவனைக் கொல்லப் பலவித வழிகளைக் கையாண்டான். இதனால் கோபம் கொண்ட பெருமாள் அசுரனை கொன்று பிரகலாதனை தன்னருகில் வைத்துக்கொண்டார். அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இத்தலம் அமைந்துள்ளது.

குடவரைக்கு தென்புறத்தில் சற்று கீழே உள்ள பாறையை ஒட்டி தாயார் அரங்கநாயகியும், அங்குள்ள பாறையில் புடைப்பு சிற்பமாக துர்க்கையும் காட்சி தருகிறார்கள். குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் படிக்கட்டின் ஆரம்பத்தில் நாலு கால் மண்டபம் உள்ளது. சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், மற்றும் ஐந்து அனுமனின் சிற்பங்களும் உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் இலட்சுமி தீர்த்தம் என்ற சுனையும் அருகில் இலட்சுமி கோயிலும் அமைந்துள்ளது.