Tag Archives: கீழப்பழுவூர்

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்.

+91- 99438 82368 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆலந்துறையார்(வடமூலநாதர்)
அம்மன் அருந்தவ நாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பழுவூர்
ஊர் கீழப்பழுவூர்
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம்,”விளையாட்டாகத் தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்என்றார்.

அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகிஎனப்படுகிறாள்.

பழுஎன்றால் ஆலமரம். எனவே சுவாமி ஆலந்துறையார்எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் திருப்பழுவூர்என பெயர் பெற்றது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியது. கோயில் எதிரில் குளம் உள்ளது. அம்பாள் சன்னிதி தனியே உள்ளது. அர்த்தமண்டப சுவரையொட்டி காலசம்காரர், அர்த்தனாரீசுவரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. தென்புற மேடைமீது அறுபத்துமூவர், திரிபுராந்தகர், ரிஷபாரூடர் ஆகியோரது உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் துர்கை, திருநாவுக்கரசர், சம்பந்தர், வினாயகர், வீரபத்திரர், சப்தமாதர்கள் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இறைவன் நேரே பார்த்தல் தெரிகிறார். மிகவும் அழகான மூர்த்தம். நாடோரும் 4 கால பூஜைகள் நடைபெருகின்றன. 1974 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது . பங்குனியில் நடைபெரும் விழாவில் 3 ஆம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள சமதக்னி முனிவருக்கு காட்சி தரும் ஐதீகம் நடைபெருகிறது.