Tag Archives: சிதம்பரம்

தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91- 94439 86996

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலக் கூத்தன்)
உற்சவர்
அம்மன் உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம் தில்லைமரம்
தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோயில்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லைவனக் காட்டில் உள்ள சுயம்பு இலிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார். இதையடுத்து, மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள இலிங்கத்தைத் தினமும் பூஜை செய்தார்.

இளமையாக்கினார் கோயில், சிதம்பரம்

அருள்மிகு இளமையாக்கினார் கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 4144 – 220 500, 94426 12650

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருப்புலீஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் தில்லை மரம்
தீர்த்தம் இளமை தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புலீஸ்வரம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குடில் அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு திருப்புலீஸ்வரர்என்றும், சிதம்பரத்திற்கு திருப்புலீஸ்வரம்என்றும் பெயர் ஏற்பட்டது.