Tag Archives: ஆறுமுகமங்கலம்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.

+91- 461 232 1486(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆயிரத்தெண் விநாயகர்

பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆறுமுகமங்கலம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

பாடியவர் – ஆதிசங்கரர் பாடல் பெற்ற தலம்.

தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது புதுமையான தகவல்.

aayiraththen_vinayakar_koil_aarumukamangalam_koil
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் தயார். அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.