Tag Archives: கொல்லிமலை

அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை

அருள்மிகு அறப்பளீசுவரர் கோயில், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்.

மூலவர் அறப்பளீசுவரர்
உற்சவர் தாயம்மை
புராணப்பெயர் கொல்லி அறப்பள்ளி, வளப்பூர்நாடு,

கொல்லி குளிரறைப்பள்ளி

ஊர் கொல்லிமலை
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு
வழிபட்டோர் காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

வைப்புத்தலப் பாடல்கள்:

சம்பந்தர் அறப்பள்ளி அகத்தியான் (2-39-4).

அப்பர் – 1. கொல்லி யான்குளிர் (5-34-1)

இன்று மக்கள் வழக்கில் கொல்லிமலைஎன்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை. ‘வல்வில்ஓரிஎன்னும் மன்னன் ஆண்ட பகுதி. காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.

அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர்என்றாயிற்று.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் மீன்பள்ளிஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.

இக்கோயிலுக்கு மேற்கில் கொல்லிப்பாவைஎன்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று உள்ளது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை

அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை சேலம் மாவட்டம்.

+91- 94422 76002, 97866 45101

காலை 7 மணி முதல் 1 மணி வரை, பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர் அறப்பளீஸ்வரர்
அம்மன் தாயம்மை, அறம்வளர்த்தநாயகி
தீர்த்தம் பஞ்சநதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கொல்லிமலை
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்யத் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, “அறப்பளீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்துவிட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது இலிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.