Tag Archives: திருப்பட்டீசுவரம்

அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்

அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2416976 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பட்டீசுவரர்
அம்மன் பல்வளைநாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் ஞானவாவி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்
ஊர் திருப்பட்டீசுவரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் வந்து, ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர். தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. அது தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் இலிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய இலிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார்.

பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம்என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர்என்றும் பெயர்கள் ஏற்பட்டன.