Tag Archives: திருவீழிமிழலை

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்.

+91-4366-273 050, 94439 24825 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீழிநாதேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்)
உற்சவர் கல்யாணசுந்தரர்
அம்மன் சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)
தல விருட்சம் வீழிச்செடி
தீர்த்தம் விஷ்ணுதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவீழிமிழலை
ஊர் திருவீழிமிழலை
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராகத் தந்தார். இதனால் தான் கோயில்களில் கண்மலர்காணிக்கை தரும் பழக்கம் உருவானது. விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தைக் கொடுத்தருளினார்.