Tag Archives: உவரி

சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி, திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புநாதர்
அம்மன் பிரம்பசக்தி
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் தெப்பகுளம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீரைவளநாடு
ஊர் உவரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது, கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது இரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீரியாக, தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொல்ல பனை ஒலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று இலிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு இலிங்கோத்பவராக உள்ளார்.