Tag Archives: திருவெள்ளறை

அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை

அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009, திருச்சி மாவட்டம்.

+91- 431-256 2243, 93451 18817 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புண்டரீகாட்சன்
உற்சவர் பங்கயச்செல்வி
தாயார் செண்பகவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் குச, மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவெள்ளறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள்,”இலட்சுமி, உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டுப் பெறலாம்என்கிறார். அதற்கு இலட்சுமி,”தங்களின் திருமார்பில் நித்யவாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்குஎன்கிறாள். “இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்தப் பாற்கடலில், தேவர்களை காட்டிலும் எனக்குத்தான் அதிக உரிமை வேண்டும்என்கிறாள். அதற்குப் பெருமாள்,”உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான்தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்என்கிறார்.