Tag Archives: திருவட்டத்துறை

திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, திருவரத்துறை, கடலூர் மாவட்டம்.

+91-4143-246 467

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை
ஊர் திருவட்டத்துறை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள்

வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம்.

இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி நீவாஎன்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவாவடவெள்ளாறுநதியாக மாறியது என்றும் கூறுவர்.