Tag Archives: அன்னம்புத்தூர்

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர்

அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில், அன்னம்புத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நிதீஸ்வரர்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

அன்னம்புத்தூர்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடி சென்று தோற்றுப் போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பெயாய் சொன்னார். அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் புகழப்பட்ட பிரம்மனுக்கு பொய் சொன்னதால் இழுக்கு ஏற்பட்டதுதான் மிச்சம். இதில் வேதனையுற்ற பிரம்மன், இந்த தலத்து இறைவனுக்கு கைநிறைய மலர்களை அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, அள்ளிச் சூட்டி, மனம் கனிந்து வணங்க, இழுக்கினால் நேர்ந்த துன்பங்கள் யாவும் விலகியதாம். ஆகவே, இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.

நம் தலையெழுத்தையே நிர்ணயித்து அருளும் பிரம்மனின் தலையெழுத்தை, கனிவும் கருணையும் பொங்க சிவனார் திருத்தி எழுதிய திருத்தலம் இது. ஆகவே, நிதீஸ்வரரை வணங்கி வழிபட்டால், சிவனாரும் அருள்வார். பிரம்மனும் நம் தலையெழுத்தைத் திருத்தி எழுதி அருள்வார். இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப் பெறலாம். வேதனைகள் நீங்க பெறலாம். நிதிகளில் பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி என எட்டு வகை நிதிகள் உண்டு. இந்த எட்டு நிதிகளையும் தனது கடும் தவத்தால் ஈசனிடம் இருந்து பெற்றவர், நிதிகளுக்கெல்லாம் தலைவரானார். அவர் குபேரன்.