Tag Archives: வைகல் மாடக்கோயில்

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல் மாடக்கோயில், ஆடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 435 – 246 5616 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
அம்மன் கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி)
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் செண்பக தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வைகல்மாடக்கோயில்
ஊர் திருவைகல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள், பூமிதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே இலட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன இலட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள், இலட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.

கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் வைகல் மாடக்கோயில்ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன. வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி உடனுறை பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.