Tag Archives: அயோத்தி

அருள்மிகு ராமர் கோயில், அயோத்தி

அருள்மிகு ராமர் கோயில், அயோத்தி– 224 124, பைசாபாத் மாவட்டம், உத்திரபிரதேச மாநிலம்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ரகுநாயகன் (ராமர்)
தாயார் சீதை
தீர்த்தம் சரயு நதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் சரயு, அயோத்தி
மாவட்டம் பைசாபாத்
மாநிலம் உத்ராஞ்சல்

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி. சரயு நதிக்கரையில் ராமனுக்கு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு இவ்வூரை கட்டியதாகச் சொல்வர். தேவர்களே இந்நகரை கிருஷ்ணனின் ராம அவதாரத்துக்காக எழுப்பினார் எனப் புராணங்களில் சொல்லப்படுகிறது. மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பரகீதர் ஆகியோர் இந்த புண்ணிய பூமியை ஆண்டனர். அதன் பிறகு பகீரதரின் பேரனான தசரதர் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் முன்று மனைவிகள். இவர்களில் கோசலைக்கு பிறந்தவரே இராமன். இராமாயணம் மறைமுகமாக சுட்டிக் காட்டும் உண்மை இதில்தான் புதைந்து கிடக்கிறது. தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால், அவள் முலமாகவே, நான்கு புத்திரர்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் மூன்று பெண்களை திருமணம் செய்து, நான்கு மக்களைப் பெற்றார். ஆனால், ஆசை மனைவி கைகேயியின் சொல்லைக் கேட்டாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, புத்திர சோகத்தால் தன் உயிரையே விட்டார். இதே போல இராவணனும் இன்னொரு பெண்ணை விரும்பியதால் இறந்தான். அயோத்தி மாநகர் ஆலயத்தில் இன்று, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இராமரை வழிபட எந்தத் தடையும் இல்லை. இங்கு இராமன், இரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இப்போது சரயு நதிக்கரையில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய தலம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு அரங்கநாதர் சன்னதியும், இராமர் சன்னதியும் உள்ளன. இராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் முவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒருசேர வழிபடும் இடம் இதுவே.