Tag Archives: குன்னியூர்

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், குன்னியூர்

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர் தஞ்சாவூர் மாவட்டம் .
********************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்திருக்கும்.

மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகத்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற கிராமம் இருக்கிறது. இப்போது இவ்வூர் குன்னியூர் எனப்படுகிறது.

இங்கே சீதளா பரமேசுவரிஎன்ற பெயரில் காமாட்சியம்மன் குடிகொண்டிருக்கிறாள். “காமஎன்ற சொல்லுக்கு அன்புஎனப் பொருள். “அக்ஷிஎன்ற சொல்லுக்கு கண் என்று பொருள். “அன்பு பொங்கும் கண்களை உடையவள்என்று காமாட்சிக்குப் பொருள் கொள்ளலாம்.

மற்றொரு பொருளின் படி காஎன்ற எழுத்திற்கு சரசுவதிஎனப் பொருள். “மாஎன்ற சொல்லுக்கு மகாலட்சுமிஎன்று பொருள். இருவரையும் தங்கள் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. இது சங்கராச்சாரியார் வாக்கு.

இந்த கோயிலில் உள்ள காமாட்சி விக்கிரகம் மிகவும் சிறியது. 200 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றியது. இங்கு அம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகையே இருந்தது. பின்பு பெரிய கோயிலாக கட்டப்பட்டது.

சிறப்பம்சம்: இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள் கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்துகூட நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிமேலடி வைத்து நடந்து செல்வார்கள்.