Tag Archives: திருத்தேங்கூர்

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 94443- 54461 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெள்ளிமலைநாதர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் தென்னை
தீர்த்தம் சிவகங்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தேங்கூர், திருத்தெங்கூர்
ஊர் திருத்தங்கூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

முன்னொரு காலத்தில் உலகம் ரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது. ஓரிடத்தில் பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய இராகு, கேது உள்ளிட்ட நவக்கிரகங்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு இலிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர். பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார். பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த இலிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம்எனப் பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு இலிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர்என்றும், அம்பிகை பிரகன்நாயகிஎன்றும் அழைக்கப்பட்டனர்.