Tag Archives: காங்கேயம்

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம்

அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம், மடவிளாகம், ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பச்சோட்டு ஆவுடையார்
அம்மன் பச்சை நாயகி (பரியநாயகி)
தீர்த்தம் நிகபுஷ்கரணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பார்வதிபுரம்
ஊர் காங்கேயம் மடவிளாகம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக (பிட்சாடனர்) அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து, தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறாகும்.

பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் பச்சோட்டு ஆவுடையார்என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் பச்சோட்டு ஆளுடையார்எனக் காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி.”