Tag Archives: துறையூர்

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர்

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர் திருச்சி மாவட்டம்.

காலை7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காளபரமேசுவரி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – துறையூர்

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

வல்லாள ராஜா என்பவர் துறையூர் பகுதியை ஆண்டு வந்தார். அவர் பெரிய கருமி. எப்படிப்பட்ட கருமி தெரியுமா? காக்கா, குருவிகள் வயலில் உள்ள நெல் மற்றும் தானியங்களை தின்றுவிடுமே என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி அவற்றை வரவிடாமல் தடுக்கும் கருமி. இப்படிப்பட்ட கருமிக்கு குழந்தை பிறக்குமா? ராச்சி பரிபாலனமே கையில் இருந்தும், எதிர்காலத்தில் அதை அனுபவிக்கப் பிள்ளை இல்லை.

அரசனுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது. “அம்மா! எனக்கு குழந்தையில்லை. நாடாளக் குழந்தை வேண்டும்,” என உருக்கத்துடன் வேண்டினான். அந்தக் கஞ்சனையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சி குழந்தை வரம் தந்தாள். ராணி கருவுற்றாள்.