Tag Archives: வைரவன்பட்டி

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி

அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில், வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம்.

+91-4577- 264 237

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வளரொளிநாதர்(வைரவன்)
அம்மன் வடிவுடையம்பாள்
தல விருட்சம் ஏர், அளிஞ்சி
தீர்த்தம் வைரவர் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வடுகநாதபுரம்
ஊர் வைரவன்பட்டி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சிவனைப் போல ஐந்து தலையுடன் இருந்ததால் பிரம்மா, தான் என்ற அகந்தையுடன் இருந்தார். ஒருமுறை பார்வதிதேவி, தனது கணவர் என நினைத்து அவருக்குரிய மரியாதைகளை, பிரம்மனுக்கு செய்தார். பிரம்மனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார். பின்பு, அவர் பிரம்மன் என உணர்ந்த பார்வதி, சிவனிடம் பிரம்மனின் செயல் குறித்து கூறினாள். எனவே, சிவன், தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இவரே, இத்தலத்தில் வைரவர் என்ற பெயரில் அருளுகிறார்.

இங்கு கருவறை கோஷ்டத்தில் இராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி இராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.