Tag Archives: தண்டையார்பேட்டை

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், தண்டையார்பேட்டை

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், சென்னை தண்டையார்பேட்டை
*****************************************************************************
காலரா மருத்துவமனை அருகில்

காலை 6 முதல் 10 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கும்மாளம்மனை மனமுருகி வணங்குபவர்கள், தங்கள் வாழ்வில் துன்பங்கள் விலகி, விரைவில் வித்தியாசத்தை உணர்வது நிச்சயம்.

அன்னை பராசக்தியின் ஓர் அம்சம்தான் கும்மாளம்மன். இந்த அம்மனே வடக்கில் சந்தோஷிமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

பூஜைகள், யாகங்களின் போது, தெய்வங்களை கலசத்தில் இருத்தியே வழிபடுவது ஆகமவிதி. அந்த முறைப்படியே சந்தோஷிமாதா வழிபாடும் நடத்தப்படுகிறது. அப்படிக் கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படுபவள் என்பதால் கும்பத்தை ஆளும் அம்மன் என்ற பொருளில் கும்பாளம்மன் என்றழைக்கப்பட்டவளே, இன்று மருவி, கும்மாளம்மன் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படுகிறாள்.

சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்காலத்தில் தென்னந்தோப்புகள் நிறைந்த இப்பகுதியில், கடற்கரையை நோக்கி எழுப்பப்பட்ட இவ்வாலயத்தில், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பல சன்னதிகள் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிவருகிறது.