Category Archives: கர்நூல்

அருள்மிகு பிரகலாத வரதன் (லட்சுமி நரசிம்மன்) திருக்கோயில், அஹோபிலம்

அருள்மிகு பிரகலாத வரதன் (லட்சுமி நரசிம்மன்) திருக்கோயில், அஹோபிலம்– 518 545, கர்நூல் மாவட்டம் ஆந்திர மாநிலம்.

+91- 8519 – 252 025 (மாற்றங்களுக்குட்பட்டது)

மலை அடிவாரக்கோயில்: காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மலைக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 3 மணி முதல் இரவு 6 மணிவரை திறந்திருக்கும்.

மூலவர் மலையுச்சி அஹோபில நரசிம்மர்

அடிவாரம் பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்

உற்சவர் 9 உற்சவ மூர்த்திகள்
தாயார் மலையுச்சி இலட்சுமி

அடிவாரம் அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி

தீர்த்தம் மலையுச்சி பாவநாசினி

அடிவாரம் இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்

பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சிங்கவேள் குன்றம்
ஊர் அஹோபிலம்
மாவட்டம் கர்நூல்
மாநிலம் ஆந்திரம்

இரணியகசிபுவின் மகன் பிரகலாதன். இவனுக்கு நாராயணனின் மீது அளவுகடந்த பக்தி. ஆனால், தந்தையோ, தானே கடவுள் என்று கூறி வந்தான். ஒருமுறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற,”அவர் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார், அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார்என நாராயணனின் புகழ் பாடினான். கோபம் கொண்ட இரணியன், தன் கதாயுதத்தால் ஒரு தூணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரம் இத்தலத்தில் நிகழ்ந்தது. முன்பு பிரகலாதன் இங்கு வாழ்ந்த அரண்மனைப்பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.