Tag Archives: திங்களூர்

கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4362-262 499, 9344589244, 9443586453

காலை 6 மணிமுதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் சந்திரபுஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திங்களூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் ஆகியோரைத் தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் முருகன், கந்தன், கார்த்திகேயன்என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு மூத்த திருநாவுக்கரசு,” இளையவனுக்கு இளைய திருநாவுக்கரசுஎன்று. தன்னை விட, தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். “மக்கள் சேவையே மகேசன் சேவைஎன்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

திங்களூர் – கோபுரம்

திங்களூர் – கோபுரம்
***********************
திருவாளர் சந்திரன் குடிகொண்டுள்ள இடம். சந்திரனுக்குப் பரிகாரம் செய்பவர்கள் இங்குதான் செய்கிறார்கள். கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. படம் எடுக்கத் தடை. இருப்பினும் கோபுரத்தை எடுத்து வந்துவிட்டேன்.