Tag Archives: திருப்புளியங்குடி

அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி

அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூமிபாலகர்
உற்சவர் காய்சினவேந்தன்
தாயார் மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார், புளியங்குடிவள்ளி
தீர்த்தம் வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புளிங்குடி
ஊர் திருப்புளிங்குடி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாம‌ரைக்‌கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய ‌‌வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன், நிருதி, தர்மராஜன், நரர் ஆகிய‌யோருக்கு காட்சி கொடுத்ததலம்.