Tag Archives: திருநகரி

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-256 927, 94433 72567 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதராஜன்
உற்சவர் கல்யாண ரங்கநாதன்
தாயார் அமிர்த வல்லி
தீர்த்தம் இலாக்ஷ புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநகரி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தரப் பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் ஒளிந்து கொண்டாள். பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலிதிருநகரி ஆனது.

திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவசு மன்னனாகப் பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது.

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி-609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-256 927, 94433 72567 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அழகிய சிங்கர்(இலட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர் திருவாலி நகராளன்
தாயார் பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் இலாட்சணி புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆலிங்கனபுரம்
ஊர் திருவாலி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம்(அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம்என்ற பெயர் பெற்று திருவாலி” (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆலிநாட்டின் குறுநில மன்னனாகத் திருமங்கை ஆழ்வார் திகழ்ந்தார். எனவே அவருக்கு ஆலிநாடன்என்ற பெயர் உண்டாயிற்று.