Tag Archives: திருப்பூர்

அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்

அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்.
*****************************************************************

+91- 0421 – 247 2200, 2484141 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோட்டை மாரியம்மன் (கோடீஸ்வரி மாரி)

அம்மன்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

தீர்த்தம்: – தாமரைத் தெப்பம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திருப்போர்

ஊர்: – திருப்பூர்

மாவட்டம்: – திருப்பூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார். பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர், தனது பயன்பாட்டிற்குப் போக, மீதிப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். ஒருசமயம், அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை.

சந்தேகமடைந்த விவசாயி பசுவிடமிருந்து யாரோ பாலைத் திருடுவதாக எண்ணி அதனைக் கண் காணித்தார். அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு, ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது. இதனைக்கண்டு வியப்படைந்த பக்தர், அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஜோதி தெரிந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், பசு பால் சொரிந்த இடத்தில் தான் எழுந்தருளியிருப்பதாக கூறினாள்.

மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு அம்பாள் சிலை இருந்தது. அந்த சுயம்புவுக்கு (தானாகத் தோன்றியது) கோயில் கட்டினர்.