Tag Archives: சென்னை

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2493 8734 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காமேஸ்வரன்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாம்பரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆன்மிக உலகத்திற்கு பெரும் ஆர்வம் உண்டு. சென்னை தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களையும் ஒருசேர வழிபடும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை சிவசக்தி வடிவமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சித்தரை வழிபடும் முறை உள்ளது. அவர்களுக்குரிய பூக்கள், நைவேத்தியம், வஸ்திரம் கொண்டு வழிபடுவது சிறப்பு.

இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை அகிலாண்டேஸ்வரியாகவும், இதிலுள்ள மரப்பலகை காமேஸ்வரன், காமேஸ்வரியாகவும் கருதப்படுகிறது.

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, சென்னை

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 94442 80595, 94441 71529

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: பாலசுப்பிரமணியர்

பழமை: 500 வருடங்களுக்கு முன்

ஊர்: சிறுவாபுரி, சின்னம்பேடு

மாவட்டம் : திருவள்ளூர்

மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்: அருணகிரிநாதர்

இராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார். மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாகக்குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர இலட்சுமணனை அனுப்பினார் இராமர். இலட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை. இதனால் இராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும். இந்த வரலாற்று செய்தியை, “சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது. இராமனிடம் இலவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரிஎன்ற சின்னம்பேடுஎன்றும் இத்தல வரலாறு கூறுகிறது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடுஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.

இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார்.