Tag Archives: கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 97879- 06582, 04182- 245 304, 293 256 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பேசும் பெருமாள்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கூழம்பந்தல்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

இந்தப் பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார். கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.