Tag Archives: ஆவூர்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், கும்பகோணம் வழி, வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்.

+91 94863 03484 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார், கவர்தீஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தல விருட்சம் அரசு
தீர்த்தம் பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்)
ஊர் ஆவூர் (கோவந்தகுடி)
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு கவர்தீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை, காமதேனுவின் கன்றான பட்டிஎன்ற பசு உணர்ந்தது. ஒரு இலிங்கம் அமைத்து, தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே அவரை நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் பசுபதீஸ்வரர்என்றும் அழைக்கப்பட்டார்.

வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். காமதேனு உலகிற்கு வந்த இடம் கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று. கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.