Tag Archives: திருவைராணிக்குளம்

மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம்

அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம், வெள்ளாரப்பிள்ளி, ஸ்ரீமூலநகரம் வழி, ஆலுவா தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா.

+91- 484 – 260 0182, 260 1182

காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாதேவர்
அம்மன் பார்வதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவைராணிக்குளம்
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

தற்போது கோயில் இருக்கும் பகுதியில் முன் காலத்தில் வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று நம்பூதிரி குடும்பங்கள் இருந்தன. இந்த மூன்று குடும்பங்களுக்கும் சொந்தமானது தான் திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில். அகவூர் மனையின் மூத்த நபருக்கு தம்பிராக்கள்” (சிற்றரசர்) என்ற பட்டமும் உண்டு. இவர்கள் குடும்பத்தில் அகவூர் சாத்தன் என்ற ஞானி இருந்தார். இவர் கல்லால் செய்த ஓடத்தில் அகவூர் மனையில் உள்ளவர்களை உட்கார வைத்து, தினமும் ஆற்றைக்கடந்து அங்கிருந்த மகாதேவரை தரிசிக்க உதவி வந்தார்.

ஒரு முறை அகவூர் தம்பிரான் ஒருவர்,”மகாதேவா! வயதான காரணத்தினால் உன்னை வந்து தரிசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. இருந்தாலும் உன்னை தரிசிக்காமல் தண்ணீர் கூட அருந்துவதில்லையேஎன முறையிட்டார். அன்றைய தினம் தரிசனம் முடித்துக்கொண்டு தான் கொண்டு வந்திருந்த ஓலைக்குடையை எடுக்கும் போது, குடை மிகவும் கனமாக இருப்பதாக உணர்ந்தார். இதுபற்றி தன் உதவியாளர் சாத்தனிடம் கூறிய போது, “பரவாயில்லைஎன்று மட்டும் கூறினார்.