Tag Archives: மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர்

அருள்மிகு அங்காளபரமேசுவரி திருக்கோயில், மேல்மலையனூர் – 604 204. விழுப்புரம் மாவட்டம்.

+91 – 4145 – 234 291

காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காளபரமேஸ்வரி

தல விருட்சம்: – வில்வம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – மேல்மலையனூர்

மாவட்டம்: – விழுப்புரம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார்.