Tag Archives: கொருமடுவு

அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில், கொருமடுவு, கெம்பநாயக்கன்பாளையம்

அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில், கொருமடுவு, கெம்பநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பால தண்டாயுதபாணி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

கொருமடுவு

மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

இயற்கையான சூழலில் மலைகள் சூழ்ந்த இரம்மியமான இடத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது கொருமடுவு பால தண்டாயுதபாணி ஆலயம். தன்னிகரற்ற அருளுடன் முருகன் இங்கே மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். முருகனின் திருவிளையாடல் நடந்த இடம் அல்லது முருகன் சிவ வழிபாடு செய்த தலங்களில் மட்டுமே மேற்கு பார்த்த முருகன் கோயில் அமையும். அந்த வகையில் இதுவும் சிறப்பான கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வில் ஒரு முறையாவது தெய்வங்களின் திருமணத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற நியதிப்படி இங்கு நடைபெறும் ஈசன் ஈஸ்வரியின் திருமணம் அனைவரும் காணவேண்டிய அற்புதமான காட்சியாகும். பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வரி அமர்வது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்தில் ஈசனுக்கு வலது பாகத்தில், வடக்கு நோக்கி அமர்ந்து வலது காலை தொங்கவிட்டு, இடதுகாலை மடித்து அம்பாள் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. இத்தலத்தில் ஏகபாத மூர்த்திக்கு (சிவன், விஷ்ணு, பிரம்மா) முன்பாக அக்னி குண்டம், பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.