Monthly Archives: March 2012

ஞாபக மறதி நீங்க

ஞாபக மறதி நீங்க

கற்பனையைவிட நிஜம் பல நேரங்களில் சுவாரஸ்யமானது ; சில நேரங்களில் பயங்கரமானதும்கூட. 80 வயதான அந்த முதியவருக்கு ஞாபக மறதி அதிகம். மூக்குக் கண்ணாடியை அணிந்துகொண்டே எங்கே என் மூக்குக் கண்ணாடி?’ என்று தேடுவதில் தொடங்கிவந்த பாதையை மறந்து திண்டாடுவது, சுற்றி இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து ஒரு கட்டத்தில் தான் யார்?’ என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. திடீரென ஒரு நாள், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மறுபடி வீடு திரும்பவில்லை. பல நாட்களுக்குப் பிறகு, அவரைக் கண்டுபிடித்தார்கள். முகத்தையே மறைத்துவிட்ட தாடி, மெல்லிசான தேகம், ஒட்டிப்போன வயிறு என்று ஒட்டுமொத்தமாக உருமாறிப்போயிருந்தவரை அந்தக் குடும்பமே சென்று அழைத்தது. ஆனல், அவருக்கு ஒருவரைக்கூட ஞாபகத்தில் இல்லை. பைக் சாவியையோ, செல்போனையோ எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடுவது இயல்பானதுதான். ஆனால், மறதி என்பது இத்தனை ஆபத்தான நோயா?

ஆனந்த விகடன்

ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது. ஒரு கப் புளிப்பில்லத மோருடன் ஒரு தேக்கரண்டி தேன் 5மிளகுகளின் பொடி ஆகியவற்றைக் கலந்து தினமும் பருகிவர ஞாபக மறதி குறையும்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொண்டால் ஞாபக மறதி குறையும்.

அரைக்காசு அம்மன் இரத்னமங்கலம் சென்னை
யோகராமச்சந்திர மூர்த்தி படவேடு திருவண்ணாலை

லோகாம்பிகா அம்மன்

லோகனார்காவு

கோழிக்கோடு

சோம்பல் நீங்க

சோம்பல் நீங்க

உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்.எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல். வெற்றியடையத் துடிக்கும் உங்களுக்கு சோம்பல்தான் கடுமையான எதிரி. சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்துவிட்டால் பின்பு காலமெல்லாம் அதனுடைய பிடியிலிருந்து மீள்வது கடினம். சோம்பலின் மறுபெயர்தான் போரடிக்கிறது என்கிற வார்த்தை. எனக்கு சந்தர்ப்பம் இல்லை; சான்சு இல்லை; என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சோம்பலாக காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும்போது அடுத்தவனோ,தானே சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு, உழைத்துக்கொண்டே சென்று உங்கள் கண்முன்னால் உங்களை வென்றுவிடுவான்.

சோம்பல் ஒரு பழக்கம். படிந்து விட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ் பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியைக் கண்டு கலவரம் வரவேண்டும். “இடித்துரைத்தால் துடித்துப் போய்விடுவேன்என்னும் மனப்பாங்கு வரவேண்டும்.
சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் உள்ளே தோன்றும். அதிருஷ்டமில்லை என்றும், படிப்பில் இந்தத் தேர்வுமுறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.

சோம்பலற்று இருக்க பிரச்சனைகள் சந்திப்பது நல்லது. குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். தூக்கம் குறையும். எழுந்தும் செய்யவேண்டிய வேலைகளை நினைத்துக் கொண்டு தூங்குவது நல்லது. சோம்பல் வரும்போது எறும்பு, தேனீ ஆகியவற்றை நினைவில் நிறுத்துங்கள். சோம்பல் பறந்துபோகும்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்றுவழிபடுங்கள்.

எறும்பீஸ்வரர் திருவெறும்பூர் திருச்சி
கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி