Tag Archives: அழகர் கோவில்

அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்

அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்– 625 301, மதுரை மாவட்டம்.

+91 – 452-247 0228, 247 0229 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமஸ்வாமி
உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள்( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் ஜோதி விருட்சம், சந்தனமரம்
தீர்த்தம் நூபுர கங்கை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாலிருஞ்சோலை
ஊர் அழகர்கோவில்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் விருசுபகிரி(கோயில் இருக்கும் அழகர் மலை) என்னும் இம்மலையில் தபசுசெய்தார். இம்மலை 7 மலைகளை கொண்டது.

எமதர்மராஜனின் தபசை மெச்சிப் பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் உன்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, எமதர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம்(வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது.