Tag Archives: திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் ஆலயம், திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் ஆலயம், திருவெற்றியூர், இராமநாதபுரம் மாவட்டம்.

திருமாலுக்கு வெற்றி கிடைக்க வழி செய்த தலம்தான் திருவெற்றியூர்.

வரலாறு : ஒருங்கிணைந்த சேர, சோழ, பாண்டிய நாட்டை மாவலிச் சக்கரவர்த்தி ஆண்டு வந்தான். அவனுக்கு, மக்களிடத்தில் அமோக செல்வாக்குப் பெருகியது. இதனால் மன்னனின் மனதில் ஆணவம் தலைதூக்கத் தொடங்கியது. இறைவனையும் தேவர்களையும் மதிக்காமல் வாழத் தொடங்கினான்.

அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர்

அருள்மிகு பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், சிவகங்கை மாவட்டம்.

+91- 4561-257 201, 257 213, 98424 59146

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பாகம்பிரியாள்

தீர்த்தம்: – வாசுகி தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – திருவெற்றியூர்

மாவட்டம்: – சிவகங்கை

மாநிலம்: – தமிழ்நாடு

இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்துவங்கினான்.

நாரதரும் சிவபெருமானும்:

இதனை அறிந்த நாரதர் நேராகக் கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான்,”முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார்.