Tag Archives: தக்கோலம்

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம்

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம், வேலூர் மாவட்டம்.

+91- 4177-246 427 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சலநாதீஸ்வரர்
அம்மன் கிரிராஜ கன்னிகாம்பாள்
தல விருட்சம் தக்கோலம்
தீர்த்தம் பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவூறல்
ஊர் தக்கோலம்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவகுருவாகிய வியாழனின் தம்பி உததி முனிவர். இவருக்கும் மனைவி மமதைக்கும் மகனாக தீர்க்கதர் தோன்றினார். ஒரு நாள் தீர்க்கதர் தன் ஆசிரமத்தின் அருகே தெய்வப்பசுவாகிய காமதேனு வரக்கண்டார். தாம் நடத்தும் வேள்விக்கு வந்தவர்களை உபசரிப்பதற்காக காமதேனுவை தம்முடன் இருக்குமாறு அவர் வேண்டினார். இந்திரன் கூறாமல் தங்க மாட்டேன் என காமதேனு மறுத்தது. முனிவர் அதை கட்டிப்போட முயன்றார். காமதேனு அவரை இழிந்த தொழில்களைச் செய்யும் நிலை ஏற்படும் என்று சபித்தது. முனிவரும் காமதேனுவை சாதாரணப்பசுவாக போகும்படி சபித்தார். உததி முனிவர் தன் மகன் இழிந்த செயல்கள் செய்வது கண்டு வருந்தினார்.

நாரதரின் அறிவுரைப்படி தன் மகனுக்காக இத்தலம் வந்து சிவனை வழிபட்டார். இறைவன் வெளிப்பட்டு,”இக்குறை தீர நந்தியை வழிபட்டு, அவர் வாயிலிருந்து தெய்வகங்கையை வரவழைத்து, அதன் மூலம் தமக்கு அபிஷேகம் செய்தால் பாவம் நீங்கும்எனக் கூறி மறைந்தார்.