Tag Archives: திருப்பாலை

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை, மதுரை மாவட்டம்.

+91 452 2681079, 95850 46910 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ராதா கிருஷ்ணர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திருப்பாலை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ராதை கண்ணன் மீது கொண்ட காதலுக்கு அடையாளமாக பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை. ஒருசமயம் தன் கோபாலனைப் பற்றிய செய்தி ஒன்றுமே யசோதைக்கு தெரியாமல் போயிற்று. “கோபாலன் எங்கே போய் விட்டான். அவனை நீண்ட நாட்களாகக் காணவில்லையே அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே. அவன் பசி தாங்க மாட்டானே. இப்போது பெரியவன் ஆகி விட்டான். வெண்ணெய் திருட இப்போது போவதில்லையேஎன வருந்திக் கொண்டிருந்தவளுக்கு ராதையின் நினைவு வந்தது. “ராதாவிடம் கேட்டால் தெரிந்து விடும். இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயக்கண்ணன் எங்கும் போக மாட்டான். ராதையும் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள். கண்ணன் இல்லா விட்டால் ராதை இல்லைஎனக் கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள்.

ராதா. கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா?” பதைபதைப்புடன் கேட்டாள் யசோதா. அப்போது ராதை தெய்வீகப்பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை. யசோதை அவள் கண் விழிக்கட்டும் எனக் காத்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்த்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள். பிறகு தன்னைத்தேடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். யசோதை கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே?” என பரபரப்பாகக் கேட்டாள். ராதா இதைக் கேட்டு எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.