Tag Archives: குருவித்துறை

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், சோழவந்தான் வழி, குருவித்துறை, மதுரை மாவட்டம்.

+91- 98425 06568 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சித்திரரத வல்லப பெருமாள்

தாயார்

செண்பகவல்லி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்டுபோன அசுரர்களை எல்லாம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மிருத்யசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்து காப்பாற்றி வந்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து, “உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மிருத்யசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும்என்றார்கள். தேவர்கள் கூறியதுபோலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம், “நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன்என்று சபதம் செய்து விட்டு, அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான். அசுரலோகம் சென்ற அவன், சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதையெல்லாம் கண்காணித்து வந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். அதன்படி கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அசுரகுருவும் ஏதும் அறியாமல் குடித்து விட்டார். கசனை காணாத தேவயானி, தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் கசனின் இருப்பிடத்தை கண்டறியும்படி வேண்டினாள். அசுரகுருவும் தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து தன் மகளை தேற்றினார். தேவயானியின் விருப்பப்படி மிருத்யசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார்.