Tag Archives: நாங்குனேரி

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்,  நாங்குனேரி-627108, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4635-250 119 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்)
தாயார் வரமங்கை தாயார்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சேற்றுத்தாமரை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வானமாமலை என்னும் திருவரமங்கை
ஊர் நாங்குனேரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

மது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தபோது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். “மாசு கழுவப்பெற்றாய்என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது.