Tag Archives: திருக்கோளூர்

அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்

அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில் (நவதிருப்பதி) திருக்கோளூர் – 628 612, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தமாநிதிபெருமாள்
உற்சவர் நிஷோபவித்தன்
தாயார் குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி
தீர்த்தம் தாமிரபரணி, குபேர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்கோளூர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவனிடமிருந்து விலகியநவநிதிகள் நாராயணனிடம் போய்ச் சேருகின்றன. நாராயணன் இந்த நிதிகளைப் பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதிஎன்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தலப் பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளைப் பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலப் பெருமாளுக்கு அதர்மபிசுனம்என்ற பெயரும் உண்டு. இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.