Tag Archives: பேரூர்

பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர்

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோவை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 1மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பட்டீஸ்வரர்
அம்மன் பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்சம் புளியமரம், பனைமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பேரூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான பட்டிவிளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.