Tag Archives: கருங்குளம்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கருங்குளம்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கருங்குளம், தூத்துக்குடி மாவட்டம்.

மூலவர் வெங்கடாசலபதி(ஸ்ரீநிவாசப் பெருமாள்)
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் புளியமரம்
ஊர் கருங்குளம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

சுபகண்டன் என்னும் அரசனுக்கு தீராத நோய் ஏற்பட்டது. அதன் காரணமாக உடல் வலியால் மிகவும் அவதிப்பட்டார். திருப்பதி சென்று ஏழுமலையானிடம் தனது உடல் நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மனமுருக வேண்டிக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற திருப்பதி வேங்கடவன், சந்தன மரத்தால் ஆன தேர் ஒன்றை செய்யும்படியும், அவ்வாறு தேர் செய்யும்போது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும் எனவும், அந்த சந்தனக் கட்டைகளை, தென்பாண்டி நாட்டிற்கு எடுத்துச் சென்று, கருங்குளத்தில் உள்ள வகுளகிரிமலையில் பிரதிஷ்டை செய்தால் அங்கு வாழும் எல்லா மக்களும் நல வாழ்வு பெறுவர் எனவும், அவ்வாறு செய்தால் மன்னரின் உடல் உபாதை சரியாகும் எனவும், வேங்கடவன், மன்னரின் கனவில் வந்து கூறினார்.