Tag Archives: கொடுங்கலூர்

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர்

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 480-281 2061 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்
அம்மன் உமையம்மை
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் சிவகங்கை
பழமை 2000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் திருவஞ்சிக்குளம்
ஊர் திருவஞ்சிக்குளம்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா
பாடியவர் சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர்

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 480-280 3061.

காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – கொடுங்கலூர்

மாவட்டம்: – திருச்சூர்

மாநிலம்: – கேரளா

சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வப் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் நடனமங்கை மாதவியின்பால் ஈர்க்கப்பட்டுத் தன் செல்வங்களை இழந்து மிகவும் இன்னலுறுகிறான். சொத்துக்களை இழந்த அவன், கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது, அச்சிலம்பும் மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, இவன் மேல் திருடன் எனும் பழி விழுகிறது. கோவலன் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசவைக்குச் சென்று தன் கணவன் கள்வனல்ல என் நிரூபிக்கிறாள். பின் மன்னனை சபிக்கிறாள். சினம் தாங்காது மதுரையை எரித்து விடுகிறாள். பின்னரும் அடங்காச் சினத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.