Tag Archives: திருப்புல்லாணி

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி – 623 532 ராமநாதபுரம் மாவட்டம். +91-4567- 254 527 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன்), கல்யாண ஜகநாதர்
உற்சவர் கல்யாண ஜெகந்நாதர்
தாயார் கல்யாணவல்லி, பத்மாசனி
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புல்லணை
ஊர் திருப்புல்லாணி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய(தற்போது கோயில் அமைந்துள்ள இடமான) திருப்புல்லாணி காட்டில், பெருமாளைவேண்டிக் கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகமகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாகக் காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம்.

பிற்காலத்தில் தாயார் பத்மாசினிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்.