Tag Archives: சுண்டக்காமுத்தூர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்லாண்டியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சுண்டக்காமுத்தூர்

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும். இதனால் சுண்டைக்காய்முத்தூர் என்றே ஊரின் பெயரும் அமைந்தது. ஒருநாள், சுண்டைக்காய் பயிரிட்ட நிலத்தில் ஏதோவொன்று தட்டுப்பட, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து நிலத்தை தோண்டினர். அப்போது, பூமியில் இருந்து அம்மனின் விக்ரகம் தென்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்,”நான் செல்லாண்டி ஆத்தா வந்திருக்கேன். இங்கேயே குடியிருக்கப் போகிறேன்என அருள் வந்து ஆடினாள். இதையடுத்து அம்மன் விக்ரகத்தை அருகிலேயே பிரதிட்டை செய்து, சிறிய கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர்.

கோயில் பிரகாரத்தில் கருப்பணசாமியும் அவரது வாகனமான குதிரையும் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் விளைநிலத்திலிருந்து வந்து காடு மேடுகளை செழிக்கச் செய்வதால் இந்த முறை என்ன பயிரிட வேண்டும் என அம்மனிடம் உத்தரவு கேட்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. என்னென்ன விதைக்க வேண்டும் என்பதை தனித்தனி சீட்டுகளில் எழுதி, அம்மனுக்கு முன்னே போடுவார்களாம். பிறகு, அங்கிருப்பவர்களில் எவர் மீதாவது அம்மன் அருள் இறங்கும். அவர் எடுத்து தரும் சீட்டில் என்ன உள்ளதோ, அதையே அந்த வருடம் பயிரிடுவர். இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.