Tag Archives: அர்ஜுனாபுரம்

அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு

அருள்மிகு அழகிய சாந்த மணவாளப் பெருமாள் திருக்கோயில், அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அழகிய சாந்த மணவாளப்பெருமாள்

உற்சவர்

அழகிய சாந்த மணவாளப்பெருமாள்

தாயார்

பத்மாவதி தாயார்

தல விருட்சம்

உறங்காப்புளி

தீர்த்தம்

இறங்காக்கிணறு

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தர்மாரண்ய க்ஷேத்திரம்

ஊர்

வத்திராயிருப்பு

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

வத்திராயிருப்பு பகுதியை புராணகாலத்தில் தர்மாரண்ய க்ஷேத்திரம் என்று அழைத்தனர். இங்குள்ள மலைப்பகுதி தர்மாத்ரிஎன்று குறிக்கப்படுகிறது. அர்ஜுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, இப்பகுதிமக்கள் வறட்சியால் நீரின்றி தவித்ததைக் கண்டு வருந்தினார். உடனே, தன் வில்லை எடுத்து பூமியை நோக்கி அம்பு தொடுத்தார். அந்த இடத்தில் அழகிய பொய்கை உருவானது. அப்பொய்கை அர்ஜுனப் பொய்கை என்றும், அங்கிருந்து உற்பத்தியான நதி அர்ஜுனாநதிஎன்றும் பெயர் பெற்றது. ரிஷிகளிடம் ஸ்ரீதேவியான லட்சுமி தாயார், “பூலோகத்தில் தவம் செய்வதற்கு சிறந்த இடம் எது?” என்று கேட்டாள். அவர்கள் இத்தலத்தைப் பற்றி சொன்னதும், அங்கு வந்தாள். இடத்தைப் பார்த்தவுடனேயே அவள் முகம் மலர்ந்தது. “லட்சுமி முகம் மலர்ந்த இடம்என்பதால் “”ஸ்ரீவக்தரம்” (திருமகள் திருமுகம்) என்னும் பொருளில் இத்தலம் அழைக்கப்பட்டுவந்தது. பின்னாளில் ஸ்ரீ வக்த்ரபுரம்என்றாகி வத்திராயிருப்பு என்று மருவியதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதேவி தாயார் இவ்வூரில் தவம் செய்து, திருத்தங்கல் என்னும் திருத்தலத்தில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.