Tag Archives: செவலூர்

பூமிநாதர் திருக்கோயில், செவலூர்

அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4322 221084, 97869 65659

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூமிநாதர்
அம்மன் ஆரணவல்லி
தீர்த்தம் பிருத்வி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் செவலூர்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்துத் தரவேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது.