Tag Archives: நகர சூரக்குடி

தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி

அருள்மிகு தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+91- 4565 -281 575

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் தேசிகநாதர்
அம்மன் ஆவுடைநாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் பைரவர் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேசிகநாதபுரம்
ஊர் நகரசூரக்குடி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

பார்வதிதேவியின் தந்தை தட்சன், ஒரு யாகம் நடத்தினான். ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம்(பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார். அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார். சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோசனம் தந்தார். இதன் அடிப்படையில், இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.