Tag Archives: காசி(வாரணாசி)

காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ,காசி, வாரணாசி, உத்தரப்பிரதேசம் மாநிலம்.

காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தீர்த்தம் கங்கை நதி (64 தீர்த்தக்கட்டங்கள்)
பழமை 3000 வருடங்களுக்கு முன்
ஊர் காசி
மாவட்டம் வாரணாசி
மாநிலம் உத்திரப்பிரதேசம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன், காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள்.