Tag Archives: வண்டியூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம்.

+91 452 262 3060 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும்.

மூலவர் வீர ஆஞ்சநேயர்
தீர்த்தம் அழகர் கோயில் தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வண்டியூர்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.

வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.

இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர் – 625 009, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************************

+91-452 – 2311 475 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – மாரியம்மன்,பேச்சியம்மன்

அம்மன்: – மாரியம்மன், துர்க்கை

தல விருட்சம்: – வேம்பு, அரசு

தீர்த்தம்: – தெப்பக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மாமண்டூர்

ஊர்: – வண்டியூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி, மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர்.

நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை (தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில்) வைத்து பிரதிட்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இத்தெப்பம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய முக்குறுணி விநாயகர் சிலை ஒன்று மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தலம் அம்மை நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையது.இங்கு அம்மன் பிரதானம் என்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.