Tag Archives: திருநாட்டியத்தான்குடி

அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி

அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி, மாவூர் வழி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 237 707, 94438 06496 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இரத்தினபுரீஸ்வரர் (மாணிக்கவண்ணர், கரீநாலேசுரர்)
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் மாவிலங்கை
தீர்த்தம் சூரிய, சந்திர தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நாட்டியத்தான்குடி
ஊர் திருநாட்டியத்தான்குடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

இரத்னேந்திர சோழ மன்னனும், அவனது தம்பியும் அவர்களது தந்தையார் விட்டுச்சென்ற இரத்தினங்களை மதிப்பிட்டுப் பிரித்து கொள்ள முயற்சித்தனர். இரத்தினத்தை மதிப்பிடுபவர்கள் பலர் வந்து இரத்தினங்களை மதிப்பிட்டும் இவர்கள் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. குழப்பம் நீடித்தது. கடைசியில் இருவரும் இத்தலத்து இறைவனிடம் வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே இரத்தின வியாபாரியாக வந்து இரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்து கொடுத்ததுடன் நாட்டையும் பிரித்து கொடுத்துவிட்டு மறைந்தருளினார் என்பது வரலாறு. இதன் காரணமாகவே இத்தல இறைவன் இரத்னபுரீஸ்வரர்என அழைக்கப்படுகிறார்.